சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை

சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்

Update: 2018-09-14 15:57 GMT
சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென  சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பின் போது  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்களது 1 மாத ஊதியத்தை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், எப்போது அந்த நிதியை அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல் 18 எம்.எல்.ஏக்கள் விவகாரம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்