அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு - அமைச்சர் உதயகுமார்

அதிமுக அரசு முழுமையாக ஆட்சி புரிய வேண்டும் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-01 05:10 GMT
அதிமுக அரசு முழுமையாக ஆட்சி புரிய வேண்டும் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் 13-ம் ஆண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்களின் தீர்ப்பு வெற்றி பெறுமா ஆட்சி இருக்கக்கூடாது என்ற சிலரின் விருப்பம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்