ரஜினி மக்கள் மன்றத்திற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்

ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரின் அதிரடி நடவடிக்கைகளால், உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2018-08-03 07:43 GMT
கடலூர் மாவட்டம் திருவரப்பூரை சேர்ந்த மருத்துவர் இளவரசன், விருத்தாசலத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். பலமான பின்புலம் கொண்ட இவர், அதிமுகவில் இருந்து விலகி, ஜெகத்ரட்சகன் மற்றும் பங்காரு அடிகளார் சிபாரிசு மூலம் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட செய்து முடித்த இளவரசன், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களை அதிரடியாக நீக்கி வருகிறார். அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் உடனடியாக நீக்கி விட்டு அந்த இடத்திற்கு வேறு ஒரு நபரை நியமனம் செய்து வருகிறார். இவரின் இந்த அதிரடி நடவடிக்கையால் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்