"அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது" - திருச்சி சிவா

"அரசின் கொள்கை மற்றும் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பட்டியலில் உள்ள விதிமுறைகளில் மட்டும் தான் நீதிமன்றங்களால் தலையிட முடியாது"

Update: 2018-06-30 08:08 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, அரசின் கொள்கை மற்றும் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பட்டியலில் உள்ள விதிமுறைகளில் மட்டும் தான் நீதிமன்றங்களால் தலையிட முடியாது என தெரிவித்தார். 

தமிழகத்தில் மருத்துவத் துறையிலும் ஹிந்தி தெரிந்தவர்கள் மட்டும் தான் இருக்க முடியும் என்ற சூழல் தற்போது உருவாகி வருவதாகவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்