"1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும்" - முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் செய்த சதி முறியடிக்கப் பட்டு உள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

Update: 2018-06-19 01:52 GMT
மயிலாடுதுறையில் நடைபெற்ற 'காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், காவிரி நதிநீர் உரிமையை மீட்க தமிழகத்தில் 38 ஆண்டு காலம் போராட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுக தலைமையிலான அரசு
நடத்திய சட்டப்போராட்டத்தால் மட்டுமே நல்ல தீர்ப்பு கிடைத்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். திமுகவுடன் சேர்ந்து  அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி  செய்ததாக முதலமைச்சர் பழனிச்சாமி குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்