"உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாஜக-வின் உண்மை அம்பலமாகும்" - ப.சிதம்பரம்

Update: 2024-02-15 15:54 GMT

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பெருநிறுவனங்கள், பெருமுதலாளிகளிடம் இருந்து பாஜக 90 சதவீத நன்கொடையை பெற்றது அம்பலமாகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரங்கள் சட்டம் மீறியதாக விமர்சித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை ஆகியவற்றுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்