ஆசையால் மோசம் போன மக்கள்.. கடிவாளத்தை பிடித்த காவல்துறை

Update: 2023-12-08 14:51 GMT

புதுச்சேரியில் இணையவழி மோசடி மூலம் மக்கள் இழந்த பணம் 85 லட்ச ரூபாய் மற்றும் திருடப்பட்ட 65 செல்போன்களையும் மீட்ட போலீசார், அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

பிட்காயின் மூலம் அமெரிக்க டாலரை குறைந்து விலைக்கு வாங்கினால் அதிக லாபம் பெறலாம் என மோசடி கும்பல் விரித்த வலையில் சிக்கி, ஆன்லைனில் 21 லட்ச ரூபாயை இழந்ததாக புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஜெயரட்சகன் என்பவர் போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த சைபர் கிரம் போலீசார், இணைய வழி மோசடிக் கும்பலின் வங்கி கணக்கை முடக்கி, சுமார் 85 லட்ச ரூபாய் பணத்தை மீட்ட நிலையில், அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, திருட்டால் பறிகொடுத்த 65 பேரின் செல்போன்களையும் மீட்ட போலீசார், அதன் உரிமையாளர்களை வரவழைத்து ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்