குமரியில் பரபரப்பை கிளப்பிய ஆடியோ.. நகர்மன்ற தலைவர் கொடுத்த விளக்கம்

Update: 2024-02-28 15:46 GMT

கன்னியாகுமாரி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை நடைமுறைப்படுத்த, கவுன்சிலர்களுடன் நகர் மன்றத் தலைவர் பேரம் பேசுவதாக கூறி வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருப்பவர் நசீர். இவர் கவுன்சிலர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிராக செயல்படுவதாக கூறி, பெரும்பாலான கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், நகராட்சியில் பல பணிகளை நடைமுறை படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், புதிதாக அமையவுள்ள வளர்ச்சி பணிகளை நடைமுறைப்படுத்த ஆதரவு கேட்டு நகர் மன்ற துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸின் கணவர் குமார் மற்றும் 12 ஆவது வார்டு கவுன்சிலர் சஜீலாவின் கணவர் ஹலில் ரஹ்மான் ஆகியோர்களிடம் நசீர் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று குளச்சல் நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்