குஜராத் தேர்தலில் கலக்கும் சரத்குமார்... கை கோர்த்த அண்ணாமலை

Update: 2024-04-23 09:03 GMT

பாஜக பிரமுகரான சரத்குமார், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் தமிழிலும், ஹிந்தியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் வெளி மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அண்ணாமலையுடன் சேர்ந்து தீவிர பிரசாரத்தில் சரத்குமார் ஈடுபட்டார். இதையடுத்து குஜராத் சென்ற சரத்குமார், அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் வசிக்கும் தமிழர்கள் முன்பு பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், முதலில் தமிழில் பேசி பின்பு ஹிந்தி மொழியில் மேடையில் பிரசாரம் மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்