கனமழையால் சேதம் அடைந்த குடியிருப்பு - ஆபத்தான நிலையில் இருந்த குடியிருப்பு இடிப்பு

பெங்களூருவில் மழையால் சேதமடைந்த குடியிருப்பை மாநகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

Update: 2021-10-13 10:25 GMT
பெங்களூருவில் மழையால் சேதமடைந்த குடியிருப்பை மாநகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தினர்.பெங்களூரு கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கமலா நகர் பகுதியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக மூன்றடுக்கு கட்டிடத்தின் தரைதளத்தில், ஒருபக்க சுவர் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால் கட்டிடம் எந்நேரமும் இடியும் நிலையில் இருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்