ஆன்லைன் ரம்மி - கேரள அரசின் தடை நீக்கம்
கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடையை நீக்கி, அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடையை நீக்கி, அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் ரம்மியை, சட்ட விரோதமாக அறிவித்து அவ்விளையாட்டிற்கு கேரள மாநில அரசு தடை விதித்தது. இதன் காரணமாக, ஆன்-லைன் ரம்மி நிறுவனங்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்பு கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு சூதாட்டத்திற்குள் வராது எனக் கூறி ஆன்லைன் ரம்மி மீதான கேரள அரசின் தடையை நீக்கி தீர்ப்பளித்தது.