பஞ்சாப் மாநில காங். தலைவராக சித்து நியமனம் - சோனியா காந்தி உத்தரவு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2021-07-19 03:14 GMT
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டு உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதலமைச்சர் அமரீந்தர் சிங்  இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நீடித்து வந்தது. இந்நிலையில் இரு தலைவர்களும் டெல்லியில் தனித்தனியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதையடுத்து சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 4 செயல் தலைவர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்