தேயிலை தோட்டத்தில் 16 அடி நீள ராஜநாகம்

அசாமில் தேயிலை தோட்டத்தில் இருந்த 16அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையிர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Update: 2021-04-04 18:01 GMT
அசாமில் தேயிலை தோட்டத்தில் இருந்த 16அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையிர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். அங்குள்ள நாஹோன் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது ராஜநாகம் ஒன்று இருந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 16 அடி நீளத்தில் இருந்த ராஜநாகத்தை மீட்டனர். சுமார் 20 கிலோ எடைகொண்ட அந்த ராஜ நாகத்தை அவர்கள் வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்