"உலக அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வோம்" - சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டாக அறிவிப்பு

உலக அளவில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி செய்யும் என அந்நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Update: 2021-01-05 12:40 GMT
இந்திய நாட்டு மக்கள் மட்டுமின்றி நம்மைப் போன்ற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு ஊசி தேவைப்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவாலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எங்களது நிறுவன தடுப்பூசிகள் உலக அளவில் கிடைப்பதை உறுதி செய்கிறோம் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.இரு நிறுவனங்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.இந்திய மக்கள் மட்டுமின்றி உலக முழுவதும் இருக்கும் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது தங்கள் முன் இருக்கும் மிக முக்கியமான பணி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் தடுப்பூசிகளுக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கு வழங்குவதற்கும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்