வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கு : நவம்பர் 4-க்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு தெஹல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது, இந்தியாவின் 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார். 11 ஆண்டாக நடந்துவரும் இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஏற்கனவே அவமதிப்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.