சொத்து தகராறில் மோதிக்கொண்ட சகோதரர்கள் - உத்தரபிரதேச சந்தையில் பானைகளை உடைத்து ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் சொத்து தகராறு காரணமாக சகோதரர்கள் இடையே சந்தையில் மோதல் வெடித்தது.

Update: 2020-10-13 05:09 GMT
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் சொத்து தகராறு காரணமாக சகோதரர்கள் இடையே சந்தையில் மோதல் வெடித்தது. அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் முற்றி கை கலப்பில் முடிந்தது. அப்போது,  ஒருவர் மீது ஒருவர் மண் பானைகளை வீசி தாக்கிக்கொண்டனர். இதனால், சந்தைப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்