கேரளாவில் மீண்டும் சுகாதார அவசரநிலை : "தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடக்கும் என எச்சரிக்கை"

கேரளாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-11 12:18 GMT
கேரளாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு சுகாதார அவசரநிலை  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தொற்று முதன்முதலாக கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், அம்மாநில அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கையை, உலகசுகாதார நிறுவனம் பாராட்டியது. இந்த நிலையில் ஓணம் பண்டிகைக்கு பிறகு, அங்கு தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஓரே நாளில் 11 ஆயிரத்து 755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2 லட்சத்து 79 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடக்கும் என்பதால், கேரளாவில் மீண்டும் சுகாதார அவசரநிலை  அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்