பஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் - நவம்பர் மாதத்திற்குள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு

பஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிற்சிக்காக, நாளை முதல் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது.

Update: 2020-08-11 07:04 GMT
பஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிற்சிக்காக, நாளை முதல் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது. இது குறித்து அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவலில் நவம்பர் மாதத்துக்குள் 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1.75 லட்சம் ஸ்மார்ட் போன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு போன்கள் நாளை முதல் வழங்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரின் 26 இடங்களில் ஸ்மார்ட் போன்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்