இரு கைகளால் கம்பு சுற்றி அசத்தும் மூதாட்டி- பரவும் வீடியோ

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில், மூதாட்டி ஒருவர் சாலையில் இரு கைகளாலும் கம்பு சுற்றி, போவோர் வருவோரிடம், யாசகம் கேட்டு வருகிறார்.

Update: 2020-07-24 05:29 GMT
மகாராஷ்டிர மாநிலம் பூனேவில், மூதாட்டி ஒருவர் சாலையில் இரு கைகளாலும் கம்பு சுற்றி, போவோர் வருவோரிடம், யாசகம் கேட்டு வருகிறார். இவரது வீடியோவை பகிர்ந்த, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், இவர் என, வினவியுள்ளார். இதனையடுத்து, அந்த மூதாட்டி குறித்த தகவல்களை பலருக்கும் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு அனுப்பி வருகின்றனர். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

"தேசத்தின் ஜனநாயக அமைப்பு ஆட்டம் கண்டுள்ளது"

தங்களது ஆட்சியில், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்பட்டு,தேசத்தின் ஜனநாயக அமைப்பு அசைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடிக்கு, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார். அதில்,  பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகளால்,அமைக்கப்பட்ட அரசாங்கங்கள் கொள்கையின்றி கவிழ்க்கப்படுவதாக கூறியுள்ளார். இதனால் தேசத்தின் ஜனநாயக அமைப்பு ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட போவதில்லை - உத்தவ் தாக்கரே

தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
வரும் 27ம் தேதி அன்று தனது வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ , சிவசேனா கட்சி தொண்டர்கள் வந்து கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும், அதற்கு பதிலாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

----------------
Tags:    

மேலும் செய்திகள்