வேளாண் அதிகாரியிடம் ரூ.11.73 லட்சம் பறிமுதல் - ஒடிஷாவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி ​

உரிய ஆவணம் இன்றி மாவட்ட வேளாண் அலுவலர் எடுத்துச் சென்ற 11 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-07-04 06:57 GMT
உரிய ஆவணம் இன்றி மாவட்ட வேளாண் அலுவலர் எடுத்துச் சென்ற 11 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடிஷா மாநிலம் ஜெயபூர் அருகே கார் ஒன்றை மறித்து நடத்திய போலீசாரின் சோதனையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அண்மையில், துணை வேளாண் ஆணையராக பதவியேற்ற பிரதீப்குமார் மொகந்தியிடம், தமது காரில் இருந்த பணத்துக்கு உரிய ஆதாரம் இல்லை. இதைத் தொடர்ந்து, பணத்தை கருவூலத்துக்கு அனுப்பிய போலீசார், வேளாண் அதிகாரியை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்