"கசப்புணர்வை ஏற்படுத்தும் வேலையில் காவல்துறை" - முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டு
புதுச்சேரியில் அபராதம் என்ற பெயரில் பொதுமக்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை காவல்துறை செய்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் அபராதம் என்ற பெயரில் பொதுமக்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை காவல்துறை செய்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொல்லை தருவதை நிறுத்த வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தினார். தினமும் இத்தனை வழக்குகள் போடவேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.