"சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு" - முதலமைச்சர் பினராயி விஜயன்

ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-06 07:52 GMT
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சபரிமலையில் ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.  பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.  பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்கள் பரிசோதிக்கப் படுவார்கள் என்றும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும், 10 வயதுக்கு குறைவான குழந்தைகளும் சபரிமலை வர அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார். தனி இடத்தில் நெய் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்