50 ஆண்டுகளாக இலங்கையில் எம்பியாக இருக்கும் ராஜபக்சே - பிரதமர் மோடி வாழ்த்து

50 ஆண்டுகளாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2020-05-28 02:13 GMT
50 ஆண்டுகளாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். தங்களது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இலங்கையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இலங்கையின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களின் முக்கிய தலைவரான ஆறுமுக தொண்டமனின் மறைவுக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் இருவரும் விவாதித்தாக, பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்