"புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைக்கு பாஜக-காங். காரணம்" - பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பொறுப்பு என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-05-24 13:06 GMT
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பொறுப்பு என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு,  நீண்ட காலம்,ஆட்சியில் இருந்து, பல மாநிலங்களில் ஆண்ட காங்கிரஸ், தலித்துகள், விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை என கூறினார். இதனால் தான், தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து அவர்கள் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கும், பெரிய நகரங்களுக்கும் சென்று, அவதிப்படுவதாக மாயாவதி கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்