விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் - இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை சார்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். போலீசார் சமரசம் செய்து உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.