கடன் திட்டங்களிலிருந்து வெளியேறும் பரஸ்பர நிதியகங்களை அவசர நிலையாக பாவிக்க வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
கடன் திட்டங்களிலிருந்து பரஸ்பரநிதி அமைப்புகள் வெளியேறுவதை அவசர நிலையாக பாவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஃப்ராங்கிளின் டெம்பிள்டன் பரஸ்பர நிதிநிறுவனம் 6 கடன் நிதி திட்டங்களிலிருந்து வெளியேறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 2008ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார சிக்கலின் போது இதே போன்ற சூழல் நிலவியபோது , மறுநாளே கூடுதலாக அரை சதவிகிதம் ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி அறிவித்ததாகவும், ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்கள் சந்தை விடுமுறையாக இருக்கும் நிலையில் திங்கட்கிழமைக்குள் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என நம்புவதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.