அரசிடம் நிதியும், மன உறுதியும் குறைவாக உள்ளது? - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

நிதியும், நெஞ்சுறுதியும் அரசிடம் குறைவாக உள்ளது போல தெரிவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-02 14:02 GMT
நிதியும், நெஞ்சுறுதியும் அரசிடம் குறைவாக உள்ளது போல தெரிவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 1 லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் மக்களுக்கு சென்று சேராமல் மத்திய அரசு கைவிரித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல, முதல் அறிவிப்பில் விடுபட்ட பிரிவுகளுக்கு நிவாரணமே கிடையாதா, இந்த பாரபட்சத்தை தட்டி கேட்க வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், அரசிடம் நிதியும், நெஞ்சுறுதியும் குறைவாக இருப்பதாகவும் மறைமுகமாக சாடியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்