நிர்பயா குற்றவாளி முகேஷ் புதிய மனு - தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை

நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2020-03-17 07:51 GMT
நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2012 டிசம்பர் 17-ல் போலீசார் தம்மை ராஜஸ்தானில் கைது செய்தனர் என்றும், சம்பவம் நடந்த டிசம்பர் 16 ஆம் தேதி தாம் டெல்லியில் இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சிறையில் தம்மை சித்திரவதை செய்கின்றனர் எனவும் மனுவில் கூறியுள்ளார். முகேஷ் சார்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்