மூணாறில் தொடரும் உறைபனி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கேரள மாநிலம் மூணாறில் உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
கேரள மாநிலம் மூணாறில், உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் பனிபொழிவு அதிகமான காணப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் ஓரிரு நாட்கள் உறைபனி இருந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, வெப்ப நிலை குறைந்துள்ளது. செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆக குறைந்ததால் அங்கு உறைபனி ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புல்வெளிகள் முழுவதும் வெண்மையாக காட்சியளித்தன