குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணி - துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரால் பரபரப்பு

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில், மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-01-30 13:27 GMT
டெல்லியில்  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில், மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் கையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரணியின் நடுவே புகுந்த அந்த நபர், "ஜெய் ஸ்ரீ ராம்" என்று முழக்கமிட்டவாறு இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். பின்னர் "இதோ உங்களது சுதந்திரம்" என்று கூறியவாறு, கையில் நாட்டு துப்பாக்கியுடன் முன்னேறி சென்ற அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்