புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் : ஆளுநர் - அமைச்சரவை மோதலால் அதிகாரிகள் கலக்கம்

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக, அம்மாநில துணை சபாநாயகர் பாலன் தலைமையிலான சட்டமன்ற உரிமைமீறல் குழு முன்பாக, தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Update: 2020-01-28 02:47 GMT
புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக, அம்மாநில துணை சபாநாயகர் பாலன் தலைமையிலான சட்டமன்ற உரிமைமீறல் குழு முன்பாக, தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், அஸ்வினி குமாரிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்கபட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முன்னதாக, அரசு செயலர், உள்ளாட்சி துறை செயலர் மற்றும் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர். இதனிடையே, புதுச்சேரி ஆளுநர்  மற்றும் அமைச்சரவை இடையிலான மோதலால், அரசு அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்