ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் - தீபிகா படுகோனே ஆதரவு

மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக களத்துக்கு சென்ற நடிகை தீபிகா படுகோனேவுக்கு, ஆதரவும் விமர்சனமும் எழுந்துள்ளது.

Update: 2020-01-08 20:40 GMT
 பிரபல நடிகை தீபிகா படுகோனே, பொது இடங்களிலும் திரை நிகழ்ச்சிகளிலும் மக்களுடன் இயல்பாக பழகி வரும் நிலையில், ஜே.என்.யு. மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காக அவர், இவ்வாறு செய்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. தீபிகா, அவரது பிறந்த நாளான கடந்த  5ஆம் தேதியன்று கணவர் ரன்வீர் சிங்குடன் விமான நிலையம் சென்றபோது, ரசிகர் ஒருவர் பிறந்த நாள் கேக்குடன் அவரை சந்தித்தார். உற்சாகம் அடைந்த தீபிகா, ரசிகரின் உணர்வுக்கு மதிப்பளித்து கேக் வெட்டினார். அவருக்கே அதை ஊட்டியும் விட்டார். இந்த நிகழ்ச்சியை சுட்டிக் காட்டி, எப்போதும் பொதுமக்கள் மத்தியில் தீபிகா இயல்பாகத்தான் உள்ளார் என மற்றொரு தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்