டிச.16-ல் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் : முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, கேரளாவில் வரும் 16ஆம் தேதி ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, கேரளாவில் வரும் 16ஆம் தேதி ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டம், நாட்டின் சமத்துவத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், இதுபோன்ற சட்டங்கள் கேரளாவில் நடைமுறைப் படுத்தப்படாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என, அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரன் விமர்சித்துள்ளார்.