அதிரடியாக உயர்த்தப்பட்ட செல்போன் கட்டணங்கள் : 39% கட்டணத்தை உயர்த்தியது ஜியோ

தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, தமது கட்டணத்தை 39 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

Update: 2019-12-05 03:31 GMT
தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, தமது கட்டணத்தை 39 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஜியோ, மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்த‌து. ஆனால், வருவாய் இழப்பு ஏற்பட்டதன் விளைவாக ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தன. இந்த நிலையில், ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, 339 ரூபாய் பிளான், 555 ரூபாய் மற்றும் 153 ரூபாய் பிளான் 199 ரூபாய் என அனைத்து திட்டங்களுக்கான 39 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்