"புதுச்சேரியில் 6 மாத இலவச அரிசிக்கான பணம் 1 வாரத்துக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்" - சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 மாத இலவச அரிசிக்கான பணம் ஒரு வாரத்துக்குள் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-04 08:57 GMT
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 மாத இலவச அரிசிக்கான பணம்  ஒரு வாரத்துக்குள் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அம்மாநில  சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் அவர், கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கந்தசாமி, சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்காக 3 ஆயிரத்து 600 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்காக ஆயிரத்து 800 ரூபாயும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்