சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

Update: 2019-11-16 09:08 GMT
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து சன்னதிக்குள் அழைத்து செல்வார். புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நாளை காலை நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்குகிறது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லும் வழக்கில் தீர்ப்பையடுத்து குழப்பமான நிலை நிலவுகிறது. சபரிமலை சீசனையொட்டி, ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்