பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

Update: 2019-09-18 20:57 GMT
பாகிஸ்தான் வான் எல்லையில், பிரதமர்  மோடி விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  வரும் 21 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை  நிராகரிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி அறிவித்துள்ளார். முன்னதாக  இந்த மாத தொடக்கத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் பறப்பதற்கும் பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்