தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்த முயற்சி - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-18 12:36 GMT
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ரிஷி நகரில்  வீட்டிற்கு வெளியே சாலையோரம் கட்டிலில் சிறுமியுடன் அவரின் தாய் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சிறுமியை தூக்கி தனது சைக்கிள் ரிக்சாவில் வைத்துள்ளார். சிறுமியின் அழுகை கேட்டு விழித்துக்கொண்ட குடும்பத்தினர் சிறுமியை அவரிடம் இருந்து மீட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்