திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடியூரப்பா சாமி தரிசனம்

கர்நாடக மாநில முலமைச்சர் எடியூரப்பா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-08-31 08:31 GMT
கர்நாடக மாநில முலமைச்சர் எடியூரப்பா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு விமானம் மூலம் ரேணுகுண்டா சென்ற அவர், கார் மூலம் திருமலை சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும், அவர்களுக்கு நல உதவிகள் செய்ய வேண்டிய கடமை தனக்கு உள்ளதாக தெரிவித்தார். இதுபோன்ற பேரிடர்கள் தொடரக்கூடாது என வேண்டி கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்