"செம்மர கடத்தலில் 5,000 தமிழர்கள் கைது" - ஆந்திர சிறையில் வாடுவதாக அதிமுக எம்.எல்.ஏ தகவல்

செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்ட தமிழக இளைஞர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா சிறையில் வாடி வருவதாக கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Update: 2019-08-15 02:50 GMT
செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்ட தமிழக இளைஞர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா சிறையில் வாடி வருவதாக கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதில், பெரும்பாலானோர் ஆரணி அடுத்த கானமலை ஊராட்சிக்குபட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேல்செண்பகத் தோப்பு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாம் பங்கேற்ற அவர், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது மக்கள் தரிசனம் என்ற பெயரில் செம்மர கடத்தலில் ஈடுபட கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்போவதாக அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்