பூரி ஜெகந்நாதர் கோயில் தேர் திருவிழா : பிரமாண்டமாக நடந்த நிகழ்வில் திரண்ட பக்தர்கள்
ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலின் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.
ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலின் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகந்நாதர், பாலபத்ரா, சுபத்ரா ஆகிய சுவாமிகள் அலங்காரத்தோடு எழுந்தருளினர். மேளதாளங்கள் முழங்க நடந்த இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.