சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளை : 23 மாட்டு வண்டிகள் பறிமுதல்-31 பேர் கைது
புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி 31 பேரை கைது செய்த போலீசார், 23 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி 31 பேரை கைது செய்த போலீசார், 23 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, மணல் கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். கைதான 31 பேரும் வில்லியனூர், ஆரியபாளையம், திருக்காஞ்சி, மங்கலம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.