மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை : முதலமைச்சர்களுக்கு அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம்

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-06-15 13:51 GMT
மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வலுத்து வரும் நிலையில் அமைச்சர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பிய அந்த கடிதத்தில், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்