தொடரும் வன்முறை சம்பவங்கள் -முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

Update: 2019-06-10 03:38 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில நாட்களாக நடக்கும் வன்முறை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை காப்பதில், மாநில போலீசாரின் தோல்வியை காட்டுவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்கவும், அமைதி நிலவவும் தேவையான  நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் வன்முறை  தொடர்பாக அறிக்கை அளிக்கும்படியும், அந்த கடிதம் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்