உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க செல்லக்கூடாது என பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக கூறி கிராம மக்கள் ஆர்பாட்டம்
உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க செல்லக்கூடாது என பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக கூறி கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.
சந்தவுளி மாவட்டம் தாரா ஜிவன்பூர் கிராமத்தில் உள்ள வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்ற மர்ம நபர்கள், வாக்காளர்களின் விரலில் வலுகட்டாயமாக மை வைத்துள்ளனர். மேலும் 500 ரூபாய் அளித்து வாக்களிக்க செல்ல வேண்டாம் எனவும், தாங்கள் வாக்குகளை பதிவு செய்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.