புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரம் - தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Update: 2019-05-10 09:25 GMT
புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் எதிர் மனுதாரர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்