மழை வேண்டி மக்களின் விநோத வழிபாடு

மழை வேண்டி தவளைகளுக்கு பூஜை செய்து ஆரத்தி எடுத்த விநோத வழிபாடு சித்தூர் அருகே நடைபெற்றது.

Update: 2019-05-01 11:39 GMT
ஆந்திர மாநிலம்,  சித்தூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள நீர்நிலைகள் வற்றியதால் நிலத்தடி நீர் மட்டமும் 50 அடிகளுக்கு கீழே சென்றுள்ளது.அதனால் தவளைக்கு பூஜை செய்தால்  மழை பெய்யும் என்கிற நம்பிக்கையில் தவளை வழிபாட்டில் கிராம மக்கள் ஈடுபட்டனர். தவளைகளை மரக்குச்சியில் கட்டிவைத்து அதற்கு மஞ்சள் பூசி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.இந்த விநோத வழிபாட்டில் கலந்து கொண்ட மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சி ஆராவரம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்