பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

Update: 2019-04-30 11:59 GMT
ரபேல் வழக்கில் பிரதமரை திருடன் என கூறியதாக, ராகுல்காந்தி மீது பாஜக சார்பில், உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 
இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ராகுல்காந்தி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மன்னிப்பு கோரினார். இதனையடுத்து இந்த வழக்கு வருகிற மே மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்