சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-02-28 01:32 GMT
சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து  வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டள்ள செய்தி குறிப்பில், இந்திய விமானி குறித்த வீடியோ வெளியான விவகாரத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடந்து கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானியை, துன்புறுத்தக்கூடாது, என்றும் இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்