சவுதி அரேபியா இளவரசருக்கு உற்சாக வரவேற்பு

முதல்முறையாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-02-20 11:43 GMT
முதல்முறையாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் இருநாடுகளின் உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து,
இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி,  பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போவதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய சவுதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல், பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சவுதி அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்